திருமணம் உதவி தொகை (உடலுழைப்பு வாரியம்)
திருமண உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்
சட்டப்படியான திருமண வயதை அடைந்த தொழிலாளி அல்லது அவர்தம் மகன்/ மகளுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.20,000/-ம் வழங்கப்படுகிறது.
உதவி பெறுவதற்கு தகுதிகள்
- தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
- தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
- தொழிலாளி மற்றும் அவர்தம் மகன்/மகளுக்கு வழங்கப்படும்.
மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்
- திருமணஅழைப்பிதழ் அசல்.
- பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் மணமகள் மற்றும் மணமகன் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
- திருமணம் நடைபெற்ற மண்டப இரசீது அசல் / கோவில் இரசீது அசல் / பதிவு சான்றிதழ் நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
- குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் மணமகள் மற்றும் மணமகன் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
- சம்பள இரசீது (திருமணத்திற்கு முன் மாதம்).
- தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியதற்கான வாரிய இரசீது நகல்.
- தொழிலாளர் நல நிதி செலுத்திய பெயர் பட்டியல் மற்றும் தொழிலாளர் நல நிதி ரூ,10/- பிடித்தம் செய்யப்பட்ட சம்பள இரசீது.
- வங்கி கணக்கு புத்தக நகல் (முதல் பக்கம்) – 2.
குறிப்பு : திருமணம் முடிந்த மூன்று மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.